thamizhini

Sep 25, 2010















நுனிநாக்கில் ஊறிக்கிடந்த நம்பிக்கையும் 
விழுந்து போச்சு...
கண்ணன் வருவான், சேலை தருவான் 
எல்லாமே கதையாகிப் போச்சு....
மிச்சமிருந்த ஒரு காலை 
பாஸ்பரசும், இறையாண்மையும்
பங்கு போட்டிடுச்சு........
மண்ணை வளமாக்க 
உடல் எல்லாமே உரமாகிப்போச்சு.........
இறுதியில் எட்டி நின்று 
முக்கைப்போத்த  
நாங்களும் அரசியலாய்ப் போனோம்...... 

4 comments:

Rajakamal said...

இதயத்தில் இறங்கி விட்ட வேதனைகளை கவிதைகள் மூலம் வெளியாக்கி விடுங்கள்

080488 said...

:((((((((

தமிழினி said...

:((((((((

முல்லை அமுதன் said...

arumai.
vaazhthukal.mullaiamuthan