thamizhini

Aug 27, 2010


                                                                             













நீ 
எவ்வளவு அழகுபடுத்தி 
கோயிலுக்கு அனுப்பினாலும் 
யாரும் என்னை 
கண்திறந்து பார்ப்பதில்லை....
சிற்பிக்கு புலம்பித்தள்ளுகிறது 
தெருவோரக்கல்














எப்போது தான் 

சொந்த காலில் நடக்க போகிறீர்கள்? 
உங்கள் தோட்டாக்களைக் கூட 
நாங்கள் தான் 
சுமக்கவேண்டியுள்ளது ...!

















நாங்கள் ஒரு வசிகமும் 

செய்யவில்லையே...
ஏன் உங்கள் துப்பாக்கிகள் 
எங்கள் பின்னாலே 
அலைகின்றன! 

Aug 26, 2010























சுற்றுலா  என்று 

சுடுகாடாய் போன 
எம் நிலத்தில் நின்று 
புகைப்படத்துக்கு சிரிக்க 
இப்போது எப்படி முடிகிறது என்னால்....!
























இது ஈழத் தமிழர்களின்
கண்ணீர்.....
நீங்கள் குடை பிடித்தே
செல்லுங்கள்!