thamizhini

Oct 16, 2010













இருக்கும் போது 
தோட்டத்துக் காவலுக்காக 
வளர்க்கப்பட்ட தாத்தா...
இன்று 
பூமாலையுடன் 
படத்தில் தொங்குகிறார்...!












வடித்த கல்லுக்கு 
பாலுட்டுகிறார்கள்....
தவித்த வாய்க்குத் 
தண்ணீர் கொடுக்காதவர்கள்....!












'அம்மா! 
இங்க பாரும்மா எவ்வளவு அழகான ஊர்'
பறந்து வந்த 
செய்தித்தாளைப் பாக்கிறாள்... 
அது அம்பானி வீட்டின் 
ஒரு பகுதி 
என்று தெரியாமல்....!
நோய்கள் என்னைத் 
தின்று தீர்த்துவிடும் 
என்பதற்காக 
பல உணவுகள் 
நான் தீண்டாமலே 
தீர்ந்து போய்விட்டன....












சோகத்துடன் 
வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறது 
பிச்சைப் பாத்திரம்...
தெருத்தெருவாய் 
கையேந்தும் 
போலீஸ் வாகனத்தை....!
இலவசக் கழிவறை 
தெருச்சுவ்ர்கள்..

Oct 1, 2010

















அழுதிருக்கிறேன்.....
செத்துத் தொலையலாம் 
என்றும் நினைத்திருக்கிறேன்.....
நல்ல வேளை...
குடிசை வீடென்பதால்
சிலந்தியைக் கண்டேன்.......