thamizhini

Sep 25, 2010


















என் குறைகள் எல்லாவற்றையும்

களைந்துவிடாதே....
நிர்வாணமாக அலைய
நான்
தயாரில்லை...












மண்ணுக்கு வந்துதானே 
மழைத்துளி உன்னைத் தொட்டது...
உதிர்ந்த 
உன் வண்ணங்கள் 
வானத்தில் எப்படி????

















அகிம்சையே வெல்லும் 
என்றுவிட்டு 
எத்தனை அம்புகளைப் 
பாச்சிவிட்டாய்... 
போதும் 
உன் பார்வையை திருப்பு.....














நுனிநாக்கில் ஊறிக்கிடந்த நம்பிக்கையும் 
விழுந்து போச்சு...
கண்ணன் வருவான், சேலை தருவான் 
எல்லாமே கதையாகிப் போச்சு....
மிச்சமிருந்த ஒரு காலை 
பாஸ்பரசும், இறையாண்மையும்
பங்கு போட்டிடுச்சு........
மண்ணை வளமாக்க 
உடல் எல்லாமே உரமாகிப்போச்சு.........
இறுதியில் எட்டி நின்று 
முக்கைப்போத்த  
நாங்களும் அரசியலாய்ப் போனோம்...... 
என் அக்காகளின் மானத்தைத் தின்ற நீ 
எப்படி விடுமுறைக்கு வீடு செல்கிறாய்? 
உன் கண்களுக்கு பயந்து 
உன் அம்மாவும் தங்கையும் ஓடி ஒளியமாட்டார்களா?


உன் பூட்ஸ்ரேகையில் 
இத்தனை தசைப்பிண்டங்கள் சிக்கிக் கிடக்க 
இந்த சம்பளத்தில் 
எப்படி உன்னால் வாய் நனைக்க முடிகிறது?


உணர்ச்சி நரம்பை 
அறுத்துவிட்டு தான் 
இணைப்பார்களோ ராணுவத்தில்?
இது தான் உங்கள் புத்தன் போதித்த புத்தாமோ? 


இன்னும் நீ மனித முகத்துடன் இருப்பது 
ஆச்சர்யம் தான்.....!
ஒவ்வொரு அலுவலகத்திலும்
நீளும் கைகளுக்கு
சொல்லிப் புரியாது.....
அவசரத்தில் கண்ட கனவுகளைக் கூட
எடுத்துவரவில்லை என்பது....!
நான் 
உயிர் பெற்ற  
அம்மாவின் வயிற்றில்
இன்று 
ஷேல்த்துண்டு....... 
தன் சகோதரனை நசித்த
பூட்ஸ் காலில் 
இறுக்கக் கடித்துவிட்டு வருகிறது 
சாலையோர எறும்பு, 
பார்த்துகொண்டு இருக்கிறேன் நான்.... 

Sep 24, 2010

தொலைந்துபோன தகவலும் இல்லை,
வந்துசேர்ந்ததாய் ஒரு செய்தியுமில்லை, 
இதுவரை சுவைத்த அனுபவமுமில்லை... 
எங்கே ஒளிந்திருந்து 
பூச்சாண்டி காட்டுகிறாய் 
சுதந்திரமே!!!!
நேற்றுக் கடைத்தெருவில் 
என் கண்ணீர்க் கதையை 
கிண்டல் செயும் போது புரிந்தது 
அன்று,
என்னுடன் சேர்ந்து அழுதமுகம் 
உன்னுடையதில்லை என்று...........

Sep 19, 2010









தலை வெடித்து
கையுடைந்து 
தெருவிலே துடித்தபோது 
வலித்தது.
தாண்டிப்போன அனைவருமே 
ஊனம் போர்த்தியவர்கள்.......












ஏதோ கட்சிக்காரர்கள் 
தெருச்சுவருக்கு வர்ணம் அடித்தார்களாம்..... 
கிழே ஓரத்தில் படுத்துறங்கியவனுக்கு 
அன்று தான் கொளிப்பண்டிகை........ 
தலைவர் வருகிறார்,
தெருகம்பங்களில் கூட விண்மீன் 
அதே வீதியில் குந்தியிருக்கும் அந்த குடிசை வீட்டில் 
இன்னும் ஒரு மின்மினி பூச்சி கூட 
ஒய்வெடுக்கவில்லை...........

Sep 18, 2010

ஒன்று செயுங்கள்!
வீட்டில் ஒரு நாய் வளர்த்து பாருங்கள் 
கொஞ்ச நன்றியையாவது 
கவ்விக்கொள்வீர்கள்........
காந்தி தேசம் 
ஒவ்வொரு ஓட்டுக்காகவும் 
நூறு ரூபா நோட்டில் 
சிரிக்கிறார்.... 












அப்படி என்ன வெட்கம்? 
 ஏன் என்னைக் கண்டதும் ஓடி ஒளித்துக்கொள்கிறாய்?
சூரியனும் மழையும் 
முணுமுணுத்துக்கொள்கின்றன.......... 














இங்கு போல் இல்லை அங்கு 
ஒரு ஊரையே அநாதை இல்லமாக 
ஒதுக்கி தந்திருக்கிறது 
எங்கள் அரசு......












செத்துக்கிடந்தால்
எட்டடி தள்ளி நிற்பவன்,
சொத்துக்கிடந்தால்
சோகத்துடன் கண்ணீர் தருவான்.....