thamizhini

Dec 31, 2008

2009

இதோ
இந்த புத்தாண்டு
எம் துயர்துடைக்கும்
புது ஆண்டு என்று
போனவருடமும்
எழுதினேன்.

ஏழுபேர் பலி
புதுவருடத்தில் குண்டுவெடிப்பு
செய்தித்தாள்
சொல்லியது.
சட்டென்று திடுக்கிட்டது
அன்று
பட்டாசுச்சத்தமென்றெண்ணி
குதூகலித்த
என்மனம்.

சுமைதாங்காமல்
இறக்கிப்போட்ட
என் துன்பங்களை
சுமந்துகொண்டலைகின்றன
சுற்றத்த உதடுகள்