thamizhini

Aug 16, 2008

சிலைக்குதவாத கல்




அவ்வப்போது
பதுங்குகுழிகள் தான்
பல நாள் தூக்கத்திற்கு தலையணை.
சில சமயம்
பசியை மூட்டை கட்டி
தூர எறிந்ததும்  உண்டு.
இந்த மண்ணில்
பிறந்ததை தவிர
வேறு என்ன செய்தோம்?
எம் உரிமையை
நாம் தானே சுமக்க வேண்டும்.
அதற்கு
எம் நாக்கிற்கு மரணதண்டனை
சாத்தியமாகுமா?
இன்னும் எத்தனை காலம் தான்
‘சிலைக்குதவாத கல்’ என்று
உடைத்தெறிவீர்கள்?
ஓர் உண்மை தெரியுமா?
சிதறிப்போக
பல வெடி மருந்துகள்
வந்து விழுந்ததே தவிர
இன்னும்
ஒரு உளி கூட
உரசிச்செல்லவில்லை.


------------------------------------------

No comments: