thamizhini

Aug 16, 2008

கதறல்கள்


பிணங்கள் மிதிபடும் பூமியில்
சன்னங்கள் தீர்த்த
எம் உறவின்
கல்லறை கதறல்கள்
என் கொலுசொலி போல
கூடவே வருகிறது.

இன்று
பூக்களும் கூட
கோயில் செல்வதில்லை.
நீர் ஊற்றியவன்
கல்லறைக்கு
வாசம் சேர்க்கிறது.
வரும் வரலாற்றில்
ஆயுதங்கள்; நிரூபிக்கட்டும்.
‘முன்பு மனிதர் வாழ்ந்தனர்’ என்று....

------------------------------