thamizhini

Aug 16, 2008

வாழ்கைச்சக்கரம்




இரவினில்
சட்டென்று
கண் விழித்துவிடும்.
அந்த சில கணத்தில்
தூக்கம் தூரத்தில் நின்று
எட்டிப்பார்க்கும்.
எதிர்காலம்
பற்றிய கனவுகள்
என்னை புரட்டிப்போடும்.
என்ன தவறு செய்தேனோ
தெரியவில்லை.
சொல்லிக்கொள்ளாமலே
விடைபெற்று செல்கிறது,
என் கண்ணீர்.
சில நிமிட
தாமதத்தின் பின்
மீண்டும்
தூக்கமும் கனவும்
என்னுடன்
கைகோர்த்து நடக்கும்.
இப்படியாக
என் வாழ்கை
உருண்டோடுகிறது.


----------------------------------

No comments: