thamizhini

Aug 16, 2008

அநாதை தொட்டில்கள்.




பால்மாவை
சுரந்துவரும் கரங்கள்
கேட்காமலே
தூங்கவைக்கும்
தொட்டில்கள்
கண்ணீர் துளி
துடைக்கும்
தலையணைகள்
எப்படியோ
எல்லாம் கிடைத்து விடும்.
அன்னையின் தாலாட்டில்
ஒரு குட்டி தூக்கம்
மட்டும் கிடைப்பதில்லை.
தெருவோரக்கூடையில்
கசக்கி எறியப்பட்ட
அந்த
பிஞ்சு கண்களுக்கு......

------------------------------

No comments: