thamizhini

Mar 29, 2010

எம் உடலுக்குச் சுதந்திரமாம்
அவிழ்த்தெறியப்பட்டன  உடைகள்.
எம் உயிர் எமக்கு சுமையாம் 
துப்பாக்கிகள் தயார்ப்படுத்தப்பட்டன.
எம் விழி வெப்பத்தைக்கூட
ஏற்கத் தைரியமில்லா கோழைகள்  
கட்டிவிட்டனர் கண்களையும்.
ஒரு கணம் கூடப் பயம் வேண்டாம்
"சித்தரிக்கப்பட்ட நாடகம்" என்று சொல்......
ஊனம் போர்த்திய உலகமடா இது!
எமக்கு மேல் மேடை போடு
அழகிப் போட்டிக்கு ஆள் அனுப்பி ரசிக்கும்
அயல் நாடு.
ஆம் கதறி அழுவது என் தங்கை தான்
இப்பொழுதெல்லாம் அவள் பங்கிறைச்சி  போல்
பிரிக்கப்பட்டிருப்பாள்.
அவசரம் வேண்டாம்
அதையும் திரையிட்டு காட்டுவார்கள்
பார்த்து மகிழுங்கள்.....

No comments: