thamizhini

Sep 3, 2008


பதுங்குகுழிகளில்
உங்கள் ஆயுதங்கள் மட்டும்
பதுங்கிக்கிடக்கட்டும்.
மீறி எம் சிறகுகள்
துண்டிக்கப்பட்டாலோ
எம் இளைஞர் தேசம்
எரிக்கப்பட்டாலோ
எம் எச்சங்களாவது
உங்கள் நாற்காலிகளை
விலங்கிடும் நாள் வரும.
அன்று, கைதட்டி வேடிக்கை பார்த்தவர்கள்
வாய்பொத்தி வாலாட்டுவார்கள.
அன்றைய நாள்
எம் சுற்றங்களின்
சுதந்திரச்சின்னமாக
பொறிக்கப்படும்.
------------------------------------------------

No comments: