thamizhini

Sep 3, 2008


உயிர்தப்ப ஊர்விட்டு
பிழைத்த கொடுமை.
அறிவூட்டி
அனாதையாக்கப்பட்ட
எம்மூர் பள்ளிக்கூடங்கள்.
கொள்ளையடிக்கப்பட்டு
கொலையுண்ட
சுற்றத்துச்சோதரன்.
வளம் நிறைந்த
பூமியில்
விளைந்துகிடந்த
பட்டினிச்சாவுகள்.
இப்படி
துளித்துளியாய்
சிதைக்கப்படுகின்ற
எம்தேசம்
மறுகன்னத்தை காட்டி காட்டியே
அலுத்துவிட்டது.
இனி,
கொஞ்சம் பார்த்து
கால் வையுங்கள்.
இங்கே
அடிபட்ட
பாம்புகள் பல
காத்திருக்கின்றன!


----------------------------------------------

2 comments:

geevanathy said...

உங்கள் கவிதைகளையும் வலைப் பதிவையும் இன்று காணக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
காத்திருங்கள் தமிழினி

எப்போது உடையும் ?

நேற்றுப்போல் இருக்கிறது
நீண்டுவளர்ந்த தென்னைகள் நின்றணிசெய்த
பாதைவழியே தொடங்கிய –எம்
நெடுந்தூரப் பயணம்.


உயிர்பிரிதல் பற்றிய உறுத்தலில்
ஊர்பற்றிய உணர்வலைகள்
ஒருவரிடமும் இல்லை அப்போது
இப்போதுதான்,
எஞ்சியவர்களில் மிஞ்சியவர் இதயங்களில்
ஊர்,உடைந்துபோன வீடு,
இழந்து போன உறவுகள்,
அவர்தம் நினைவுகள்
என்றெல்லாம் ஏக்கமாய்.


ஒன்றிரண்டாய் குடிவந்து
ஊருக்கும் உயிர் வந்து
ஒருவருடமாகிறது
நாங்கள் மட்டும்
நடைப்பிணமாய்
நண்பர்கள் வீட்டில்


நாள்தோறும் எதிர்பார்ப்பு
நனைந்து போகிறது கண்ணீரில்
பேச்சுக்கள், பேச்சுக்கான பேச்சுக்கள்,
அறிக்கைகள்,ஆர்ப்பாட்டம்,வாக்குறுதிகள்
சமாதானத்துக்கான யுத்தம்
என்றனைத்துக்கும் அப்பால்
சிறைவைக்கப்பட்டிக்கிறது என் வீடு
எப்போது உடையும்
உயர் பாதுகாப்பு வலயம்.

தமிழினி said...

நன்றி அண்ணா...

உங்கள் கவிதையும் நன்றாக உள்ளது.....அழகான வரிகள்..