thamizhini

Nov 27, 2010














உன் மடியில் ஊறிக்கிடக்கும் என் தூக்கம் 
கலைந்துவிடக் கூடாது என்பதற்காக 
கடிக்கும் நுளம்புடன் 
காந்தியாய் மாறி போரிடும் கால்கள்.....
கனவுகண்டு விழித்தெழும் போதெல்லாம் 
தலைதடவி தூக்கமூட்டும் 
உன் கைகள்......
இமைப்பொழுதில் என் கனவுகளைத் திருடி 
மறுகணத்தில் 
நனவாய்த் திருப்பித் தரும் 
உன் உடல் சொட்டும் வியர்வைகள்......
எனக்கொன்றென்றால் 

முதல்த் துளி சொட்டும் 
உன் கண்கள்.....
பாதி நேரம் எனக்கும், 

மீதி நேரம் எனக்காகவும் 
துடிக்கும் உன் இதயம்....
என் முத்தங்களை எல்லாம் 

சேமித்து வைப்பதற்காகவே 
உன் கன்னதுக்குழி............
மீண்டும் நான் உனக்கே மகளாக
இவளவும் போதும் அப்பா............

4 comments:

nrtharsan said...

Really amazing......

தமிழினி said...

Thanx...

su.sivaa said...

அப்படியே அழுதுவிட்டேன் தமிழ்.... ஒரு தந்தையின் பெருமையில் என்னையறியாமல் கண்ணீர். உன் தந்தையை நீ நேசிப்பதுபோல், என் மகளும் நாளை என்னை இப்படித்தானே உருகவைப்பால்.......
உயிரை இனிக்க வைக்கும் அற்புத கவிதை.
தயவு செய்து உன் கவிதைகளை நூலாக்க முயற்சி எடு.
தாமதமான முயற்சி உன் மொழிக்கும், உன் திறமைக்கும் தீங்கு செய்கிறாய்.

முல்லை அமுதன் said...

vaazhthukal
mullaiamuthan